Gunal

மனிதாபிமான அறிக்கையிடலில் ஊடகவியலாளர்களின் வகிபாகம்

ஒலுமுதீன் கியாஸ் மனிதாபிமான அறிக்கையிடல் என்பது, ஆயுத மோதல், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் புலம்பெயர்தல் ஆகியவற்றின் போது, ஏற்படுகின்ற மனிதாபிமான நெருக்கடிகளால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படும் துன்பங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைப் பதிவுசெய்து, அவற்றை ஊடகங்கள் மூலம் வெளிக் கொணர்வதாகும். மனிதாபிமான நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை கடுமையான சவால்களைக் கொண்டது. இதனால் அவர்களின் நாளாந்த வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்படலாம். வாழ்வியலுக்கு தேவையான அடிப்படை விடயங்களான உணவு, உடை, உறைவிடம், சுகாதாரத் தேவைகள் போன்றவற்றை பெறுவது […]

மனிதாபிமான அறிக்கையிடலில் ஊடகவியலாளர்களின் வகிபாகம் Read More »

மனிதாபிமான நெருக்கடிகள்: சவால்களும் நிலையான தீர்வுகளும்

ம. கிரோஷன் மனிதகுலம் அதன் நீண்ட வரலாற்றில், அறிவியல் மற்றும் கலைகளில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்துள்ளது. எனினும், மறுபுறம், போர்கள், பஞ்சம், இயற்கைச் சீற்றங்கள், பெருந்தொற்றுகள் போன்ற பல காரணங்களால் ஏற்படும் சொல்லொணாத் துயரங்களை எதிர்கொண்டும் வருகிறது. இவையே மனிதாபிமான நெருக்கடிகள் என அழைக்கப்படுகின்றன. இந்தப் பிரச்சினைகள் ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது நாட்டின் எல்லைக்குட்பட்டவை அல்ல; அவை ஒட்டுமொத்த மனிதகுலத்தின் பொதுவான சவால்களாகும். இந்த நெருக்கடிகள் ஏன் எழுகின்றன, அவை எவ்வாறு மனித வாழ்க்கையைப் பாதிக்கின்றன,

மனிதாபிமான நெருக்கடிகள்: சவால்களும் நிலையான தீர்வுகளும் Read More »

மனிதாபிமான நெருக்கடிகளை சமாளிக்க ஒன்றிணைவோம்!

Faarika Faizal மனித சமூகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முன்னேற்றத்தின் பல படிகளைக் கடந்து வந்துள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் நாம் சாதித்துள்ள உயரங்கள் வியப்புக்குரியது. எனினும், மனித குலம் எதிர்கொள்ளும் மனிதாபிமானப் பிரச்சினைகள் இன்று உலகத்தைச் சிதைக்கும் மிகப் பெரிய சவாலாகவே உள்ளது. மனிதனின் அடிப்படை உரிமைகள், மரியாதை, பாதுகாப்பு, சமத்துவம் ஆகியவை இன்றும் முழுமையாக நிலைநாட்டப்படவில்லை. மனிதாபிமானம் என்பது மனிதனின் மனிதத் தன்மையை, கருணையை, பரிவை, அடிப்படை வாழ்வுரிமைகளை மதிப்பதை குறிக்கும்.

மனிதாபிமான நெருக்கடிகளை சமாளிக்க ஒன்றிணைவோம்! Read More »

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தீராத தேடல்

ஜோசப் நயன் “எப்போதும் போல கடற்றொழிலுக்குச் சென்ற என் மகன், சமையலுக்காக மீன்களுடன் வீடு திரும்பும் நேரம் வந்தது. ஆனால், வழக்கத்திற்கு மாறாக என் வீட்டுச் சூழலில் இருந்த காகங்கள் இடைவிடாது கரைந்தன. வழமையாகக் காகங்கள் கரைந்தால், வீட்டுக்கு யாரோ வரப்போகிறார்கள் என்றுதான் அர்த்தம். ஆனால், என் நிலையோ அவ்வாறு அமையவில்லை. மாலை நேரம் கடந்தும் என் மகனைக் காணவில்லை.  அவனை நான் தேடாத இடமில்லை; இரவு கடந்தும் அவனைக் குறித்த தகவல் ஏதுமில்லை. கடற்படை முகாமுக்கு

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தீராத தேடல் Read More »

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்:காணாமல் போனோர் பற்றிய தொடர் கேள்விகள்

(அ . அச்சுதன்)  உலகிலேயே மிக அழகான தீவுகளின் 2025ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், அதே இலங்கையின் வடபகுதியில் உள்ள செம்மணியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில் இதுவரை குழந்தைகள் உட்பட 235க்கும் மேற்பட்டவர்களின் மனித எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இது, அழகிய இலங்கைத் தீவின் பின்னால் மறைந்துள்ள மனிதாபிமானமற்ற கடந்த கால கொடூரங்களை வெளிக் கொணர்வதாக உள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஆழத்தைக் கருத்தில் கொள்ளும்போது, அங்கு

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்:காணாமல் போனோர் பற்றிய தொடர் கேள்விகள் Read More »